களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார்

 

Temple

 

 

 

 

 

 

image

ஆலயத்தின் அமைப்பு:-

தமிழர்கள் பழங்குடி மக்கள் பல நூறாயிரம் வருடங்கள் வாழ்ந்து பண்பட்டவர்கள். தமது வாழ்க்கை அனுபவங்களை தமது சந்ததிக்கு வழங்கிச் சென்றுள்ளனர். பழமொழிகளாகவும் முது மொழிகளாகவும் பொன் மொழிகளாகவும் இலக்கியங்களாகவும் இலக்கணங்களாகவும் அவை வழிகாட்டுகின்றன.

'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்'
'ஆலயந் தொழுவது சாலமும் நன்று'

என்ற பொன் மொழிகளின் மூலம் ஆலயத்தின் அவசியமும் கடவுள் வழிபாட்டின் அத்தியாவசியமும் உணர்த்தப்பட்டுள்ளன.

ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாகும் ஒவ்வொரு சமயத்தினரும் தமது வழிபாட்டு இடங்களை பல்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். இந்துக்கள் தமது வழிபாட்டு இடங்களை ஆலயம் கோவில் என்ற பெயர்களால் பெரும்பாலும் அழைக்கின்றனர். உயிர்களாகிய ஆன்மாக்களை பசுக்கள் என்றும் இறைவனை பதி என்றும் கூறுவர். பசுக்களை 'ஆ' என்று அழைப்பது மரபு ஆன்மாக்களாகிய 'ஆ'க்கள் இறைவனாகிய பதியிடம் லயித்துளூ கட்டுப் பட்டு, ஒன்று சேரும் இடம் ஆ 10 லயம் என்று பொருள் கூறுவர் கோ 10 இல் என்பதே கோவில் உயிர்கள் அனைத்திற்கும் அரசனாகிய இறைவனை 'கோ' என்று அழைத்தனர். 'கோ' வாகிய இறைவனுடைய வீடு கோயில் தமிழ் இலக்கண முறைப்படி நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவற்றை உடன் படுத்துவதற்கும் வருமொழி முதலில் வரும் உயிர் எழுத்து ஏறுவதற்கு உடம்பாகவும் ஒரு மெய் எழுத்து வர வேண்டும் என்பது விதி. நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ என்பன வந்தால் உடம்படு மெய்யாக ய், என்பதும் ஏனைய உயிர் எழுத்துகளுக்கு ஷவ்| என்பதும் ஷஏ| என்பதற்கு ய், வ் இரண்டும் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோ 10 ல் என்பதிலே நிலை மொழியாகிய கோ என்பதில் ஓ நிலை மொழி கடைசி எழுத்து எனவே வ் என்பது உடம்படு மெய்யாக வரவேண்டும் அவ்வாறு வந்தால் கோ 10 வ் 10 ல் என்பது ஸ்ரீ கோவில் என்று வரவேண்டும் கோயில் என்று வழங்குவது மருஉ என்று இலக்கணத்தில் கூறப்படும்.

 

மூலஸ்தான அறை :-

ஆலயங்களை பல்வேறு விதமாக பிரித்து நோக்கலாம் ஆலயத்தின் கட்டிடங்களின் தன்மைக்கேற்ப பந்தல் ஓலைக் கொட்டில் களிமண், செங்கல், கருங்கல், குகை என்று பிரிக்கலாம் தெய்வங்களின் தன்மைக் கேற்ப சிவன், திருமால், பிள்ளையார், முருகன், காளி, மாரி, கண்ணகை என்றும் பிரிக்கலாம். எனினும் சிற்பாச்சாரிகள் சிவாலயம், மடாலயம், என்றும் இருவகையான அமைப்பினையே பெரும்பாலும் கருத்தில் கொள்வர். வேதாகம விதி முறைப்படியும் அளவுப் பிரமாணங்களின் படியும் கட்டப்படும் ஆலயங்கள் சிவாலய முறைக்கு உட்பட்டதாகும். மனித உடல் ஒன்று நீட்டி நிமிந்து படுத்திருப்பதாக கொண்டு அது அமைக்கப்படுகின்றது. சிரசு இருக்கும் இடம் கர்ப்பக் கிருகம் - கருவறை - மூலஸ்த்தானம் ஆகும். கால் பாதம் இருக்கும் இடம் கோபுரமாகும். இக் கோவிலுக்கு கொடி மரம் அமைக்கப்படும். திருவிழா ஆரம்பத்தை கொடியேற்றம் என்று அழைப்பது மரபு. வேதாகம விதி முறைகளுக்கும் அளவுப் பிரமாணங்களுக்கும் அமையாது கால தேச வர்த்த மானங்களுக்கும் பொருளாதார நிலமைகளுக்கும் ஏற்ப அமைக்கப்பட்ட ஆலயங்கள் மடாலயங்கள் என்று பெயர் பெறும் இவற்றிக்கு கொடி மரங்கள் கிடையாது வருடாந்த திருவிழாக்களை அலங்கார உற்சவம் என்று அழைப்பது வழக்கம் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம் தான்தோன்றியாக காட்சி தந்த சிவலிங்கத்திற்கு உடனடியாக கொத்துப் பந்தல் இட்ட இடத்தை மூலஸ்தானமாக கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது ஆரம்பத்தில் மூலஸ்தானம் மட்டுமே கோவில் என்கின்ற நிலமை இருந்தது அதனை ஓலைக் குடிசை, களிமண் கோவில், கற்கோவில், என்று மாற்றும் போது சிவாலய விதிகள் பின்பற்றப் பட்டதாக தெரியவில்லை. இதனால் மூலஸ்த்தானத்தை தொடர்ந்து வரும் மண்டபம் பலிபீடம் என்ற பெயருடன் அமைந்து விட்டது. காலப்போக்கில் எனைய மண்டபங்கள் அமைக்கப் பட்டபோதும் பொருளாதார வசதிக்கும் இட வசதிக்கும் எற்ப அவை விஸ்தரிக்கப்பட்டுள்ளன. சிவாலய விதிமுறைப்படி கருவறையுள் இருக்கும் மூல மூர்த்தியின் அளவுப் பிரமாணங்களுக்கு ஏற்பவே கருவறையில் நீள அகல உயரங்களும் மூலஸ்தான தூபியும் அமைக்கப்படவேண்டும் என்பது விதி. கருவறையின் அளவுக்கேற்பவே எனைய அனைத்து மண்டபங்களும் அமைக்கப்படவேண்டும். சிவாலய விதி முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயத்தின் மூலமூர்த்தியின் அளவுப் பிரமாணத்தை அறிந்து கொண்டால் அவ்வாலயத்தின் ஏனைய மண்டபங்களையும் அவற்றின் அளவுப் பிரமாணங்களையும் மிகத் துல்லியமாக அளவிட்டு கூறலாம். இதனாலேதான் திருக்கோணேஸ்வரம் திருக்கேதிஸ்வரம் என்னும் ஆலயங்கள் அந்நியரால் அழிக்கப்பட்ட பின்னர் பழைய சுவடுகளை கண்டுபிடிக்க முடிந்தது. களுதாவளைப்பிள்ளையார் ஆலயத்தின் கருவறையில் சிவாலிங்கம் அளவுப் பிரமாணம் எவருக்கும்மே தெரியாது. எனவே இங்குள்ள கோவிலின் அளவுப் பிரமாணம் சரியா பிழையா என்பதையும் துணிந்து கூறமுடியவில்லை மடாலய அமைப்புடைய இக்கோவிலுக்கு கொடிமரம் இல்லை. மூலஸ்தானத்தில் தூபியும் இல்லை. வாசலில் இராஜகோபுரமும் இல்லை. மூலஸ்த்தானம் கிறவல் சேர்ந்த குட்டைக் கற்களினால் சுமார் இரண்டு அடி அகலமான சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. சுண்ணாம்பும் தேனும் குழைத்து கட்டப்பட்டதாக கதை இந்த கோவிலுக்கு கருங்கல்லினால் கதவு நிலை பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான கற்கள் இன்றும் ஆலய வெளி வீதியில் கிடப்பதைக் காணலாம். சுமார் ஏழு அடி உயரம் அளவுக்கு சுவர் எழுப்பப்பட்டு அதற்கு பழைய நாட்டு ஓட்டினால் கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டிட வேலைகள் நடைபெறும் போதும் கருவறையிலிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்யக்கூடிய வகையில் முதிரை மரத்தூண்கள் நான்கினை காலாக நட்டு முதிரைப் பலகைகளினாலே அதற்கு கூரையும் அமைத்து தேர்போன்ற ஓர் அமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர்.

கற்சுவரினால் கோவில் அமைக்கப்பட்டபின் மூலஸ்த்தானத்திற்கு முதிரைப் பலகைகளால் ஆன மச்சு அமைக்கப்பட்டது. மூலஸ்தத்தான கதவில் பூட்டுகள் திறக்க முடியாத பிரச்சினைகள் ஏற்படும் போது உள்ளே சென்று அதனை திறப்பதற்கு மூலஸ்த்தான சுவரில் மூலஸ்த்தான கதவு நிலைக்கு மேலே வலது புறமாக சிறியேதோர் யன்னல் அமைந்திருந்தனர். இதனை கள்ளக் கதவு கள்ளவாசல் என்று குறிப்பிட்டனர். மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட மச்சும் நாட்டு ஓடுகளால் வேயப்பட்ட கூரையும் நாக பாம்புகளின் உல்லாச புரியாயிற்று

 

இக்கருவறை, ஆலய புனருத்தாரணங்களின் போது உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. அவ்வாறான நிலமையில் மூலஸ்த்தான அறையின் அளவை விஸ்த்தரிக்காது வடக்கு தெற்கு மேற்குப் புறங்களில் அதன் கூரையை விஸ்த்தரித்துள்ளனர். நிலமட்டத்தில் இருந்த சிவலிங்கத்தின் பாதுகாப்புக்காக மூன்றடி உயரமான ஒரு மேடை கட்டப்ட்டு அதன் நடுவில் சிறிய துளை இடப்பட்டதும் இயந்திரம் கீறப்பட்டதுமான ஒரு கருங்கல்லை பொருத்தியுள்ளனர். அடியார்களின் தரிசனத்திற்காக பஞ்சலோகத்தால் ஆன பிள்ளையார் விக்கிரகம் அம்மேடையில் பிரதிஸ்டை பண்ணப்பட்டு இருந்தது. சுமார் ஆறு அங்குல உயரமான பிள்ளையார் விக்கிரகங்கள் பல மூலஸ்த்தானத்துள் இருக்கின்றன. சுமார் இரண்டங்குல உயரமான சிவலிங்கம் ஒன்றும் உண்டு. இயந்திரம் கீறப்பட்ட செப்புத் தகட்டுக்கும் செய்யப்படும் அபிஷேக திரவியத்துளிகள் கருங்கல் துவாரத்தின் ஊடாக மேடையுள் இருக்கும் சிவலிங்கத்திற்கும் அபிடேகம் ஆகிறது மேடையில் நடைபெறும் அபிடேக நீர் வெளியேறுவதற்கு கருங் கல்லால் செய்யப்பட்ட கோமுகை வட புறம் உள்ளது. இக் கோமுகையும் கற்கதவு நிலையின் கீழ்ப் பாகமாக இருந்த கல்லும் ஒரே தன்மையானவை இப்போது மூலஸ்தானம் புனரமைக்கப்பட்டு மரப் பலகையால் ஆன மச்சும் தேர் போன்ற அமைப்பிலான கூடாரமும் அகற்றப்பட்டு அண்டர்சீற் அடிக்கப்பட்டுள்ளது. சீமையோடு வேயப்பட்டு (வெங்கலத்தால்) ஆன கும்பாகுடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது இக் கும்பா குடங்கள் புதிதாக உருக்கி வார்த்தெடுக்கப்பட்டன. மூலஸ்தானத்திற்கு மேல் உள்;ள கும்பா குடத்தின் உள்ளே கும்பாபிஷேக விஞ்ஞாபன ஆங்கிலம் சொல் நோட்டீசும் பழைய காலத்தில் பாவனையில் இருந்த தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலக் காசுகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கும்பா குடங்களுள் வைக்கப்பட்டிருந்தவையாகும். குருமாரைத் தவிர வேறு எவரும் மூலஸ்த்தானத்துள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிறிய பிள்ளையார் திருவுருவம் அடியார்களின் தரிசனத்திற்கு தெளிவாக தெரியாத காரணத்தினால் புதிய திருவுருவம் சுமார் இரண்டடி உயரம் அளவில் பஞ்ச லோகத்தால் வார்த்தெடுக்கப்பட்டு பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது மூலஸ்த்தானத்தின் உட்சுவர்களும் நிலத்தளமும் பழிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

 

பலிபீட அறை :-

மூலஸ்த்தானத்துடன் தொடர்பது இங்கே பலிபீட அறை எனப்படுகின்றது. பலிபீட அறைக்கு வடக்கேயும் தெற்கேயும் கிழக்கேயும் வாசல்கள் உள்ளன. இவ்வறையின் நடுவில் சுமார் ஒரு அடி உயரமான மேடை ஒன்று உள்ளது. இம்மேடைக்கும் பழிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேடையின் மேற்குப் புறமாக மூலஸ்தான மூர்த்தியை பார்த்த வண்ணம் முக்கோணம் ஆன ஒரு உலோகத் தகட்டின் மீது மூசிகம் ஒன்று மூல மூர்த்தியை பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மூலஸ்தான கதவு நிலைக்கும் இந்த மூசிகத்திற்கும் இடையே உள்ள சுமார் மூன்றடி இடைவெளியில்தான் அடியார்களால் பொங்கல் செய்யப்படும் பிரசாதம் நிவேதனமாக படைக்கப்படுகின்றது. எத்தனை பொங்கல் பானைகள் வந்தாலும் எவ்வளவுதான் பிரசாதத்தை படையல் செய்தாலும் அந்த மூசிகத்தின் உயரத்தை தாண்ட முடிவதில்லை நடுவில் உள்ள மேடையை சுற்றி பன்னிரெண்டு மடைகளும் மேடையின் மீது ஒருமடையுமாக பதின் மூன்று மடைகள் வைக்கப்படும் இந்த மேடையின் கிழக்குப் புறத்தில் நேர்கடனாக கொடுக்கப்பட்ட உலோகத்தால் ஆன யானைகள் பல உண்டு. அவை பல வடிவின காலத்தாலும் வேறுபட்டவை இவைகளுக்கு இடையே படுத்திருக்கும் நிலையில் செய்யப்பட்ட உலோகத்தால் ஆன நந்தி ஒன்றும் காணப்படுகின்றது. சிவாலயமாக இருந்தபோது பலிபீடத்தில் மூசிகத்துக்குப் பதிலாக இருந்த நந்தியே இது என கருதப்படுகின்றது. பலபீட அறையின் வடபுறச் சுவரோடு இணைத்து எழுந்தருளிகள் கொலுவிருக்கும் சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் விரதம், திருவிழா, தீர்த்தம் என்பவற்றின் போது திருவீதி உலா வரும் உற்சவ மூர்த்திகள் இங்கு தெற்கு நோக்கிய பார்வையில் வீற்றிருக்கின்றனர்.

எல்லா மூர்த்திகளும் நிற்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக பிள்ளையார் வீற்றிருக்கின்றார். அவரது வலது புறத்திலே உமாதேவியும் சிவபெருமானும் இருக்க இடது புறமாக வள்ளியும் அம்மனும் முருகப்பெருமானும் தெய்வானை அம்மனும் கொலு வீற்றிருக்கின்றனர். இந்த எழுந்தருளி மண்டபத்தின் கூரை கொங்கிறிட்டினால் அமைக்கப்பட்டு 3 கும்பா குடங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நாள் தோறும் வருகின்ற பூசைப் பெட்டிகள்யாவும் இவ் மண்டபத்தின் உள்ளே வாங்கி வைக்கப்படுகின்றன. இவ்வறையினுள் குருமார், ஐயா, கோவில் பணியாளர், என்பவர்களே அனுமதிக்கப்படுவர். முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆசார சீலர்கள் ஆன ஆலய முக்கியஸ்தர்கள் சிலரும் அனுமதிக்கப்படுவது உண்டு. இதன் கூரை சீமையோட்டினால் வேயப்பட்டுள்ளது இதற்கும் அண்டர்சீற் அடிக்கப்பட்டுள்ளது.

தம்ப மண்டபம் :-

பலிபீட மண்டபத்தை அடுத்து இந்த மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப காலத்தில் இம் மண்டபத்துள் பெரியதொரு பெட்டகம் வைக்கப்பட்டு இருந்தது. பெறுமதி வாய்ந்த ஆலய சொத்துகள் இதனுள் வைக்கப்பட்டு இருந்தன. முதிரை பலகைகளினால் அழகாகவும் உறுதியாவும் இது செய்யப்பட்டு இருக்கின்றது. மூன்றரை அடி அகலமானதும் ஏழு அடி நீளமானதும் ஆக இது உள்ளது. தனி ஒரு பலகையே ஒவ்வொரு பக்கமும் அணைக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுது வாகனசாலையில் இடமாற்றப்பட்டுள்ளது. இம் மண்டபம் அடியார்களின் தரிசன மண்டபமாக உள்ளது. பெரும்பாலும் ஆண்களே இவ் மண்டபத்துள் நின்று வணங்குகின்றனர். ஆலயத்தின் நிருவாகக்தோடு சேர்ந்த வண்ணக்குமார், கடுக்கண்டவர், மதிப்புக்குரிய பெரியவர்கள், கௌரவ அதிதிகள் என்போர் இவ் மண்டபத்துள் நின்று வணங்குவர், பிள்ளை விற்று வாங்குதல் அன்னம் ஊட்டுதல் விரதங்களின் போது பத்திரம் போடுதல் என்பனவாய நிகழ்வுகளின் போது மட்டும் பெண்கள் மண்டபத்துள் சென்று வருவர் சாதாரணமான வேளைகளில் செல்வதில்லை. விநாயகர் சட்டி விரதத்தின் போது அதற்குரிய கும்பம் இம் மண்டபத்தின் உள்ளேயே வைக்கப்படுகின்றது. ஏடு படித்தல், பத்திரம், போடுதல் என்பவையும் இதனுள்ளேயே நிகழ்கின்றன. முற்காலத்தில் ஆலயத்திற்கு வரும் புதிர் கோட்டைகள் இம்; மண்டபத்தின் உள்ளேயே கட்டி தொங்க விடப்பட்டு இருந்தனர். இம் மண்டபத்திற்கு கிழக்குப் புறமாக ஒருவாசலும் மேற்குப் புறமாக பலிபீடத்தினுள் நுழைவதற்கு ஒருவாசலும் உண்டு. இதன் கூரையும் சீமை ஓட்டினால் வேயப்பட்டு கும்பாகுடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அண்டர்சீற் அடிக்கப்பட்டுள்ளது. கருவறை பலிபீட மண்டபம் தம்ப மண்டபம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்த சுவர்களால் தொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 

சந்தன மண்டபம். :-

தம்ப மண்டபத்தை தொடர்ந்து சுற்று மதில் கதவு வரை இம் மண்டபம் நீண்டிருக்கின்றது. சந்தனம் அரைக்கும் கல் இந்த மண்டபத்துள் வைக்கப்பட்டு இருந்தமையால் இதனை சந்தன மண்டபம் என்று பெயரிட்டு உள்ளனர் போலும். தம்ப மண்டபத்தின் சுவரும் கூரையும் தம்ப மண்டபத்தின் கதவில் இருந்து சற்று நீண்டிருக்கின்றன. அதனோடு இணையத்தக்க வகையில் நான்கு நான்கு தூண்களாக எட்டு தூண்கள் அமைக்கப்பட்டு சுவர்கள் அற்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களில் தெற்குப் பக்க மேல் மூலைத் தூணின் அடியில் 04.04.1948 என்ற திகதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் நிறைவடைந்த திகதியாக இதைக் கொள்ளலாம். தம்ப மண்டபத்தின் தொடர்ச்சியாக சுமார் பத்து அடி நீளமான பகுதி சுவராக நீண்டிருக்கிறது. தம்ப மண்டப கதவு நிலைக்கு இரு புறமும் காவற் தெய்வங்களான இரண்டு. துவார பாலகர் உருவம் சீமெந்து கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது. புனருத்தாரனத்திற்கு முன்பு துவாரபாலகர் உருவம் சுவரிலே நீற்றுச் சுண்ணாம்பினால் புடைச் சிற்பமாக உருவாக்கப்பட்டு இருந்தது. துவாரபாலகர் உருவத்திற்கு மேலே கதவு நிலைச் சுவரில் கொங்கிறிற்தளம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மீது சீமெந்தினால் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடுவிலே பிள்ளையாரும் தென் புறமாக பார்வதி சிவனும் வட புறமாக வள்ளியம்மன் முருகப்பெருமான் தெய்வானை அம்மனும் அமைக்கப்பட்டு உள்ளன. இவ் மண்டபத்தின் தெற்குப் புறச் சுவரிலே திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் வடக்கு புறச் சுவரிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் மாணிக்கவாசப் பெருமானும் சீமெந்து சிற்பங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளனர். சங்காபிஷேகம் தவிர்ந்த ஏனைய ஸ்நபிநாபிஷேகங்களக்குரிய கும்பங்கள் இவ் இடத்திலேயே வைக்கப்படுகின்றன. அக்கினி காரியத்திற்கு உரிய ஓம குண்டம் தூண்களால் ஆன சந்தன மண்டபத்துள் நடை பெறுகிளன்றது. சங்காபிஷேகமும் இந்த மண்டபத்திலேயே நடைபெறுகின்றன. திருமணங்களும் இதனுள் நடைபெறுகின்றன பூசை நடை பெறும் போது மூல மூர்த்தியை தரிசிப்பதற்கு ஏற்ற விதத்தில் கல்வனை சுபைப்புகளால் நடுவில் வழிவிட்டு இருவரிசை அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் இதனை அகற்றி மீண்டும் பொருத்தக் கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளது. எழுந்தருளிகளை பொன்னூஞ்சல் ஆட்டும் மண்டபமாகவும் இது பயன்படுகின்றது. இவ் மண்டபத்தின் உலாத்தலில்; நான்கு சங்கிலிகள் நிரந்தரமாக பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. நீளமான பொன்னூஞ்சல் பலகையும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனி உத்தர தீர்;த்தம் விநாயகர்சஷ்டி காப்பு தீர்த்தம் திருவாதிரை தீர்த்தம் என்பவற்றின் முடிவில் பொன்னூஞ்சல் பாடப்படுகின்றது. இந்தமண்டபத்துக்கும் அண்டர்சீற் அடிக்கப்பட்டுள்ளது. கூரை சீமை ஓட்டினால் வேயப்பட்டுள்ளது.

 

முகப்பு மண்டபம் :-

சந்தன மண்டபத்தின் முடிவிடத்துடன் ஆலயத்தின் சுற்று மதில் உள்ளது. கதவு நிலையை அடுத்து மதிலுடன் இணைந்து வெளிப்புறமாக இந்த முகப்பு மண்டபம் அமைந்துள்ளது. இம் மண்டபத்தின் இரு புறமும் சுமார் ஒன்றரை அடி உயரமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் காவற்கார்களும் ஏனைய அடியவர்களும் தங்கும் இடமாக இது பயன்படுகின்றது இதனுடைய கூரை நான்கு புறமும் முகப்பு அமைந்தவிதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபத்தின் கதவு நிலைக்கு மேல் கொங்கிறிற் தளம் அமைத்து சீமெந்தினால் பிள்ளையார் உருவம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் கூரையும் சீமை ஓட்டினால் வேயப்பட்டு கும்பாகுடம் கவிழ்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் கூட்டு பிரார்த்தனை நிகழ்வு இந்த மண்டபத்திலேயே நடைபெறுகின்றது. இதற்கும் அண்டர்சீற் அடிக்கப்பட்டுள்ளது.

 

வெளி மண்டபம் :-

இதுவும் நான்கு நான்கு கொங்கிறிற் தூண்களால் கொங்கிறிற் கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி மண்டபமாக இது காட்சியளிக்கின்றது. குளிர்ந்த நிழலும் குழு குழு என்ற காற்றும் ஏகாந்தமான அமைதியும் இம் மண்டபத்திலே கிடைக்கின்றது. ஆண்டவன் சந்நிதி மனதிற்கு நிம்மதி என்பதை நிருபிப்பதாக இந்த வெளி மண்டபம் அமைந்துள்ளது.

 

நாகதம்பிரான் ஆலயம் :-

இக் கோவிலின் ஆரம்பம் பற்றி கூறுகின்ற கல் வெட்டில் தென்மேற்கு மூலையில் ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்புக்கண்டான் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. ஆவரை மரப் பொந்திலோ மரத்தடி புற்றின் உள்ளோ நாகங்கள் வசித்திருக்க வேண்டும். சிவலிங்க வழிபாடு ஆரம்பமான காலத்தில் இருந்து நாக வழிபாடும் தொடர்ந்திருக்கிறது. தென்மேற்கு மூலையில் சுற்று மதிலுக்கு உள்ளே சிறியதோர் ஆலயமாக நாகதம்பிரான் கோவில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெற்ற காலங்களில் வாய்ச்சீலை கட்டி குரைச்சியினுள் பால் பழம் கரைத்து வைக்க, நாகங்கள் சுற்றி நின்று அவற்றை குடிப்பதை அடியவர்கள் நேரில் கண்டுள்ளனர். அண்மைக் காலம் வரை பொங்கலுக்கு, பிள்ளையாருக்கு பெரிதோர் பானையை பொங்கல் இடுவதும் நாகதம்பிரானுக்கு தனியாக வேறோர் சிறிய பானையில் பொங்கல் இடுவதும் வழக்கமாக இருந்தது. இன்றும் சிலர் அந்த நடை முறையினை கடைப்பிடிக்கின்றனர். நாகதம்பிரான் கோவிலை சுற்றி வலம்வரும் போது தெற்கு மேற்கு புறத்திலே சிறியதோர் இடைவெளியின் ஊடாகவே சுற்றி வரவேண்டியுள்ளது. அப்போது நாகதம்பிரான் எண்ணம் நெஞ்சில் வருவது தவிர்க்க முடியாது. புனருத்தாரணத்தின் போது சீமையோடு வேயப்பட்டு அண்டசீற் அடிக்கப்பட்டு கும்பாகுடம் தாபிக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகம் சிலா விக்கிரகமாக மருந்துச் சாத்தி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நித்திய பூசை நடைபெறுகின்றது.

நவக்கிரக கோவில் :-

வடக்கு வீதியிலே சந்தன மண்டபத்தோடு இணைந்த சுற்றுப் பிரகாரத்திலே வசந்த மண்டபத்திற்கு அருகே நவக்கிரக கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிலா விக்கிரகங்கள் மருந்துச் சாத்தி ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன் கூரை கொங்கிறிற்றினால் அமைக்கப்பட்டு கலசம் பதிக்கப்பட்டுள்ளது. நித்திய பூசை நடைபெறுகின்றது. கிரக தோசம் உள்ளவர்கள் சாந்தி செய்கின்றனர். தேங்காய் வெட்டியும் அர்ச்சனை செய்தும் நவக்கிரக வழிபாடு நடைபெறுகின்றது. சனீஸ்வரருக்கு புரட்டாதியில் சனிஸ்வர ஹேமம் நடைபெறுகின்றது. அன்று விசேடமாக எள் எரித்து வழிபடுகின்றனர்.

வைரவர் கோவில் :-

காவல் தெய்வமான வைரவர் இவ் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் சுற்று மதிலோடு இணைந்ததாக பிரதான வாசலுக்கு அண்மையில் மேற்கு நோக்கிய பார்வையில் கோவில் கொண்டுள்ளார். ஞான வைரவராகவும், ஆதி வைரவராகவும், கபால வைரவராகவும் உருத்திர வைரவராகவும் உட்தண்ட வைரவராகவும் சுடலை வைரவராகவும் கெங்கை வைரவராகவும் மாறிநிற்கும் காவற் தெய்வமான வைரவர் அண்மைக்காலம் வரை திரி சூலத்திலேயே காட்சி தந்தார். புனருத்தாரணத்தின் போது வைரவர் சிலா விக்கிரகம் அஸ்டபந்தனம் செய்யப்பட்டுள்து. நித்திய பூiஐ நடைபெறுகின்றது. வைரவர் பூiஐயின் Nபுhது திருநீறு போடுதல் நூல் கட்டுதல் என்பன நடை பெறுகின்றன சீமையோட்டினால் வேயப்பட்டு அண்டர் சீற் அடிக்கப்பட்ட இவ்வாலயத்திற்கும் கலசம் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. வருடாந்த ஆனி உத்தர தீர்த்தம் முடிவுற்றதும் அதனை அடுத்துவரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வைரவர் பூசை. மடை பரவி பெரு விழாவாக கொண்டாடப்படும். பொங்கல் உறட்டி மோதகம் பலகாரம் பருப்புவடை உழுந்துவடை படி வகைகள் என்பவற்றை பெரும் அளவில் நிவேதனம் செய்து விழாவாக கொண்டாடுவர்.

வசந்த மண்டபம் :-

ஆலயத்தின் வடகிழக்கு மூலையை சார்ந்து சுற்று மதிலையும் இணைத்து வெளிவீதியையும் அணைத்து தெற்கு நோக்கிய பார்வையில் இம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகையுடன் கூடிய கொங்கிறிற் கூரை மூன்று கலசங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாக்கள் நடை பெறும் போதும் காப்பறுப்பு தீர்த்தம் திருவாதிரை தீர்த்தம் என்பவற்றுக்கு புறப்படும் போதும் குடும்ப ரீதியான சித்திரைப் பூசை, சிவராத்திரி பூசை, திருவாதிரை பூசை, கார்த்திகை பூசை, தை பூசை, ஆவணி சதுர்த்தி பூசை என்பவற்றின் போதும் எழுந்தருளிகள் அனைத்தும். திருவாசியுடன் சாத்துப்படி அலங்காரத்தோடு வசந்த மண்டபத்துள் கொலுவீற்றிருப்பார். விசேட தீபாராதனைகளுடன் வசந்த மண்டப பூசை நடைபெறும்.

தீர்த்தக் கிணறு:-

ஆலயத்தின் வட புறத்திலே சுற்று மதிலின் உள்ளே இக்கிணறு அமைந்துள்ளது. கோமுகை கல்லை அண்மித்ததாகவும் பலிபீட மண்டபத்தின் வடக்கு வாசல் சுற்று மதிலின் வடக்கு வாசல் என்பவற்றுக்கு மேற்குப் புறமாகவும் இது அமைந்துள்ளது. மூல மூர்த்திக்கு அபிடேகம் செய்யவும் மூலஸ்தானம் பலிபீடம் என்பவற்றை சுத்தம் செய்யவும் அவற்றுள் பயன்படுத்தப்படும் தீபங்கள் தளிசைகள் மணி- முதலியவற்றை சுத்தம் செய்யவும் மட்டுமே இக்கிணற்று நீர் பயன்படுத்தப்படுகின்றது.

வாகன சாலை :-

ஆலயத்தின் தெற்குப் புறமாக சந்தன மண்டபத்திற்கு நேரே சுற்று மதிலோடு இணைத்து உள் வீதியில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் பல பிரிவுகளாக பிரிக்கப்;பட்டுள்ளது. வாகன சாலையுள் ஆலயத்திற்கு சொந்தமான இரண்டு மூசிக வாகனங்களும் ஒரு எருது வாகனமும் ஒரு மயில் வாகனமும் பாயும் நிலையில் உள்ள இரட்டைக் குதிரை வாகனமும் ஆக ஐந்து வாகனங்கள் வைக்கப்பட்டு;ள்ளன. பழைய பெட்டகத்தினுள் முத்துக் குடைச்சீலை கும்பத்துக்குரிய செம்புகள் வெண்சாமரை முதலியன வைக்கப்பட்டுள்ளன. கொடி குடை ஆலவட்டம் தீவர்த்திகள் என்பனவெல்லாம் இங்கு பாதுகாப்பாக உள்ளன. ஆயிரத்தெட்டு சங்குகளும் இங்குள்ளன.

களஞ்சிய சாலை :-

வாகன சாலையோடு இணைந்ததாக மேற்குப் புறத்தில் களஞ்சிய சாலை அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வரும் பூiஐப் பொருள்களின் அன்றாடஉபயோகத்திற்கு மிகுதியானதும் பாதுகாக்க கூடியதுமான பொருள்கள் இங்கு களஞ்சியப்படுத்தப்படும். அரிசி பாக்கு சீனி சர்க்கரை நெய் தேன் கற்பூரம், ஊதுவர்த்தி சாம்பிராணி தேங்காய் என்பவற்றை குறிப்பிடலாம். இரண்டொரு நாள் சேமிக்கப்படக் கூடிய பழவகைகளும் களஞ்சியப் படுத்தப்படுவதுண்டு.

பாதுகாப்பு அறை :-

வாகன சாலையுடன் இணைந்ததாக கிழக்குப் புறம் உள்ள சிறிய அறை பாதுகாப்பு அறையாக உள்ளது. நேர்கடனாக வரும் விளக்கு தாம்பாளம் தழிசை குடம் என்பனவாய திருப்பணிப் பொருட்கள் இதனுள் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதற்குப் பக்கத்தில் கிழக்கு திசையில் மதிற் சுவரில் கதவொன்று உண்டு. கதவுக்கு கிழக்கே மற்றுமொர் அறை தொடர்கிறது.

மடைப் பள்ளி :-

தெற்கு மதில் சுவர் கிழக்கு மதில் சுவர் என்பவற்றோடு இணைந்து தென்கிழக்கு மூலையில் மடைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த மடைப்பள்ளியுள் தயாரிக்கப்படும் நிவேதன பொருட்கள் மட்டுமே பிள்ளையாரின் மூலஸ்தானத்துள் நிவேதிக்கப்படுவது வழக்கம் மடைப்பள்ளி பாவனைக்குரிய தண்ணீர் தீர்த்தக் கிணற்றில் இருந்துமட்டுமே பெறப்படுகின்றது. இதனுள் நாள் தோறும் வெள்ளரிசிப் பொங்கல் தயாரிக்கப்படுகின்றது. இதனை பிரதம பூசகருக்கு உதவியாக இருக்கும் ஐயரே செய்ய வேண்டும் என்பது மரபு இதனை உள்ள முது என்று அழைப்பர். மூலஸ்தானத்தின் உள்ளே நிவேதனம் செய்யப்படுவதால் இது உள்ளமுது எனப் பெயர் பெற்றது.

 

ஒளி, ஒலி களஞ்சிய சாலை :-

மடைப் பள்ளி சுவருடன் இணைந்ததாக சுற்று மதிலுக்கு வெளியே கிழக்கு தெற்குப் புற யன்னல்களுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் கோவிலுக்கு சொந்தமான ஒலி பெருக்கி உபகரணங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையின் உள்ளும் கோவிலின் பழைய பெட்டகம் ஒன்று உள்ளது. பெறுமதியான பொருட்கள் அதனுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

காரியலாலயம் :-

பாதுகாப்பறை வாகன சாலை களஞ்சிய சாலை என்பவற்றின் சுவரோடு இணைந்து சுற்று மதிலுக்கு வெளியே இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்குப் புற கதவுடன் கிழக்கும் தெற்கும் பலயன்னல் கொண்ட அமைப்பாக இக் காரியாலயம் அமைந்துள்ளது. இக் காரியாலயத்தை அடுத்து மேற்குப் புறமாக செயலாளரின் அலுவலகமும் அதற்கு மேற்குப்புறமாக தலைவரின் அலுவலகவும் அமைத்துள்ளது. காரியாலயம் நாள் தோறும் திறந்திருக்கின்றது. ஆலயத்திற்கு வருகின்ற பணம் பெறுமதியான பொருள்கள் என்பவற்றுக்கு பற்றுச் சீட்டு வழங்கி பெற்றுக் கொள்ளப் படுகின்றது. அர்ச்சனை பூசை, பிள்ளை விற்றல், நூல் கட்டுதல் விறகு விற்பனை, முடி வழித்தல். ஆடு, மாடு, கோழி, தென்னம்பிள்ளை விற்பனை அரிசி, தேங்காய் அபிஷேகப் பொருள்கள் கற்பூரம் ஊதுவர்தி என்பவற்றுக்கெல்லாம் இங்கு பற்றுச் சீட்டு வழங்கப்படுகிறது.

,மடம் :-

கோவில் வெளி வீதியின் தென்புறமாக பழைய மடம் ஒன்று காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் கிறவல் சேர்ந்த குட்டைக் கற்களினால் அத்திவாரம் இடப்பட்டு குறுகிய உயரத்துடன் கூரை அமைக்கப்பட்டு இருந்தது பின்னர் அது நாற்புறமும் விறாந்தை அமைப்புடன் கூடியதாக புனரமைக்கப்பட்டுள்ளது. சுங்கான் கல் என்ற அமைப்பில் விறாந்தையின் சுவர் வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு உள்ளறைகளுடன் இது அமைந்துள்ளது. ஆலய பிரதம குருவின் தற்காலிக இழைப்பாறும் அறையாக ஒரு அறையும் சமையலறையாக மற்றொன்றும் பயன்படுத்தப்படுகின்றன. பொங்கல் தளபாடங்களான பானை, சட்டி, குறைச்சி, வாளி, குடம், அகப்பை, சவள், திருவுபலகை, வடிதட்டு, அரிக்கஞ்சட்டி, முதலியவற்றின் களஞ்சிய சாலையாக ஒரு அறை உபயோகப்படுத்தப்படுகின்றது. பிரதம குருவின் உதவியாளரான ஐயர், கோவிலின் பணியாளர்களான காவற்க்காரர்கள் என்போரின் பொருடகளை வைக்கும் ஒரு அறையாக மற்றொரு அறை பயன்படுத்தப்படுகின்றது. சுற்றியுள்ள விறாந்தைகளை அடியவர்கள் பொங்கல் வேலைக்குரிய ஆரம்ப பணிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். முன்னைய காலத்தில் விநாயகர் சஷ்டி விரதம் அனுட்டிப்போர் சிலர் காப்புக் கட்டிக் கொண்டு விரதாரம்பம் தொடக்கம் முடியும் வரை இம்மடத்தில் தங்கி இருக்கின்றனர்.

பொங்கல் மடம். :-

கோவிலின் ஆரம்ப காலத்தில் ஆலய வீதியில் அநேக மருத மரங்களும் ஏனைய நிழல் மரங்களும் நின்ற போது அம் மரங்களின் நிழலில் வீதி எங்கும் அடுப்பு மூட்டி பொங்கல் இட்டனர். வேகமாக காற்று வீசும் போது அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மருத மரங்களை மறைவிடமாக்கி மரத்துக்கு அண்மையில் சிலர் அடுப்புகளை மூட்டினர். காலப் போக்கில் நெருப்பு மரத்தினை சூடாக்கி பட வைத்து பொந்துகளை உண்டாக்கியது. இதனால் சில மரங்கள் எரிந்து போயின. சில மரங்கள் பெருமழைக்கும் காற்றுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சரிந்தும் முறிந்தும் வீழ்ந்தன. இதனால் பெருமழை காலங்களில் பொங்குவதற்கு ஏற்றதாக கூரை இடப்பட்ட திறந்த அமைப்புக்கள் பொங்கல் மடம் ஒன்று பழைய மடத்துடன் இணைத்து அதன் வடப்பக்கமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் இருபது இருபத்தைந்து பொங்கல் பானைகளுக்கு உரிய அடுப்புகளினை ஒரே நேரத்தில் இவ்விடத்தில் அமைக்க முடியும் இப்போதைய நிலையில் வெள்ளிக்கிழமைகள், வேறு முக்கியமான தினங்கள் என்பவற்றில் நுற்றுக்கு மேற்பட்ட அடுப்புகள் தேவைப்படும் போது வெளி வீதியில் மரத்தடி நிழலில் அமைத்துக் கொள்கின்றனர்.

விறாந்தை :-

ஆலயத்துக்கு வருவோர் தேங்காய் திருவுதல், அவல் பிரட்டுதல், மோதகம் அமைத்தல், கடலை, பயறு, பேரிச்சம் பழம், சக்கரை முதலியவற்றை துப்பரவு செய்தல் என்பனவாய வேலைகளை மண் தூசு, அழுக்கு படாத வகையில் செய்வதற்கு, கோவிலின் சுற்று மதிலோடு இணைந்து தென்மேற்கு மூலையில் ஒரு விறாந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரை சீற்றினால் வேயப்பட்டு உள்ளது.

மின் பிறப்பாக்கி பாதுகாப்பகம்

ஆலயத்துக்கு மின்சார சபையினால் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1978 ம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. அப்போது பிரதான மின் கம்பங்கள் பெரியகுளம் பன்குளம் என்கின்ற குளங்களை ஊடறுத்து சென்று கொண்டு இருந்தன. அப்பொழுது கிளைகள் அற்றதும் உருக்கி வார்த்தது போன்று உருண்டை வடிவமானதுமான உயரமான பெரு மரங்கள் நடப்பட்டு இருந்தன. கனடாவில் வளர்ந்த அம் மரங்கள் எண்ணெயுள் அமுக்கி எடுக்கப்பட்டு, கொண்டு வந்ததாக கூறுவர். பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக தாழையடியில் சிறியதோர் மின்மாற்றியை பொருத்தி மின்சாரம் வழங்கப்பட்டது. களுதாவளையில் முதன் முதலில் மின்சாரம் பெற்ற பெருமை பிள்ளையார் போவிலுக்கே உண்டு மின்மாற்றிக்குரிய பெறுமதியையும் ஆலயமே செலுத்தியது. அந்த மின்பிறப்பாக்கி மூலமே கிரமத்தின் வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. சூறாவளிக்கு பின்னர் பிரதான மின் கம்பங்கள் பிரதான பாதை அருகில் நடப்பட்டன. பிரதான பாதை அருகில் இருந்து மின்மாற்றி மூலம் கோவிலுக்கும் ஊருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

திருவிழாக் காலங்களில் பெருமளவு மின்குமிழ்களை பயன்படுத்தும் போது மின் பற்றாக்குறை நிலவியது. சில வேளைகளில் மின்சாரம் தடைப்பட்டு விடுவதும் உண்டு. இதற்காக தனியாரிடம் இருந்து மின் பிறப்பாக்கிகள் வாடகைக்கு பெறப்பட்டன. இனப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வன்செயல்களின் போது மின்சார சபைக்குரிய மின் பிறப்பாக்கிகள் சேதம் அடைவதும் செயல் இழந்து போவதும் நடை பெறலாயிற்று மின் கம்பங்கள் மின் கம்பிகள் துண்டிக்கப்படுவதும் அடிக்கடி நடை பெறலாயிற்று இவற்றைக் கருத்தில் கொண்டு எழுபது ரியூப் லைட்டுகளை ஒளி விடச் செய்யக் கூடிய மின்சக்தி வாய்ந்த மண்ணெனையில் இயங்கும் நடுத்தர அளவிலான மின் பிறப்பாக்கி ஒன்று கோவிலால் கொள்வனவு செய்யப்பட்டது.

இதனை பயன்படுத்துவதற்கு வேண்டிய வயர் மின்குமிழ்கள் என்பனவாய உபகரணங்களும் வாங்கப்பட்டு ஒளி, ஒலி அமைப்புக்காக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார். அந்த மின் பிறப்பாக்கி தேய்வடைந்து பழுதடைய கோவிலின் தேவை கருதி நூற்றி ஐம்பது ரியூப் லைட்டை ஒளிரச் செய்யும் அளவிலான

மின் பிறப்பாக்கி ஒன்று கொள்வளவு செய்யப்பட்டமையினால் அதனை பாதுகாப்பாக பொருத்தி வைப்பதற்கு கோவிலின் தென்மேற்கு மூலையில் வெளிவீதியில் கொங்கிறிற் கூரையுடன் கூடிய காப்பகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஆலய மணித்தூண் :-

ஆரம்ப காலத்தில் ஆலயத்தில் முகப்பு வாசலுக்கு வட புறமாக வைரவர் கோவிலின் பின்புறமாக சுற்று மதிலுடன் இணைந்ததாக மணித்தூண் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அதன் உறுதி இழந்தமையால் முகப்பு வாயிலின் தென்புறமாக சுற்று மதிலோடு இணைத்து புதியதோர் மணித்தூண் கட்டப்பட்டது. புதிய மணியும் வார்க்கப்பட்டது. பழைய மணி ஆலய வீதியில் வடகிழக்கு திசையில் வளந்திருந்த வேப்பை மரக்கிளையில் கட்டி அடிக்கப்பட்டது. பின்னர் அது கோவிலினுள் வசந்த மண்டபத்தடிக்கு மாற்றப்பட்டது. தற்காலிகமாக அது கல்ரடிப் பிள்ளையாரடிக்கும் வந்தது திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வடகிழக்கு மூலையில் உள்ள அரச மரக்கிளையில் சிறிது காலம் கட்டப்பட்டிருந்த பின் இப்பொழுது இரண்டு மின்கம்பங்களுக்கு இடையில் கட்டப்பட்டுள்ளது.

சனமூக நிலைய மண்டபம். :-

தீர்த்தக் கேணியில் பன்குளத்திலிருந்து தனியாகப் பிரித்து எல்லையிட்டு தீர்த்தக் கேணியை ஆழமாக்கும் போது இந்த மடம் அமைந்துள்ள இடம் பன்குளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தீர்த்தக் குளத்தில் தோண்டப்பட்ட மண்ணைக் கொட்டி நிரப்பி அது வீதியாக்கப்பட்டது. அந்த வீதியில் இந்துகலாசார அமைச்சிடம் இருந்து சனசமூக நிலைய கட்டிடம் என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட நிதி உதவியைக் கொண்டு இந்தமடம் அமைக்கப்பட்டது. வாசிகசாலையாக பயன்படுத்துவதற்காக இதற்கு பெரிய மேசை வாங்குகள் புத்தகம் வைக்கும் அலுமாரிகள் கதிரைகள் என்பனவெல்லாம் வழங்கப்பட்டன. எனினும் காலப்போக்கில் மறைந்துவிட்டன. கட்டிடத்தை தவிர்ந்த நிலையத்தில் இருந்து பெறப்பட்ட தென்னங் கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு பகுதி ஆலயத்தின் வடக்கு மேற்குப் பகுதியில் நடப்பட்டுள்ளன.

 

விறகுக் கொட்டில் :-

பொங்கலுக்கு வருவோர் ஆரம்ப காலத்தில் கோவிலைச் சூழ இருந்த காடுகளில் விறகுகளை பெற்றுக் கொண்டனர் பின்னர் கோவில் வெளிவீதியில் இருந்த தென்னை மரங்களில் அடிமட்டைகளும் பாளைகளும் உதவின. காலப்போக்கில் இவைகளும் குறைவடைய பொங்கலுக்கு வருவோர் விறகும் கொண்டு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் வளர்ச்சி அடைந்த போது தூர இடங்களில் இருந்து வருவோர் விறகு கொண்டுவருவதில் பெருஞ்சிரமங்களை எதிர் நோக்கலாயினர். இதனை கருத்தில் கொண்டு ஆலய நிருவாகம் விறகினை கொள்வளவு செய்து விற்பனவு செய்ய நடவடிக்கை எடுத்தது. வியாபார நோக்கில் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் அடியார்களின் சேவையை நோக்கமாக கொண்டு இங்கு விறகு விற்பனை நடைபெறுகின்றது. வெளி இடங்களில் இருந்து லொறிகளில் கொண்டு வரப்படும் வீரை மரத்தின் விறகுகளே பெரும்பாலும் விற்கப்படுகின்றது. இதனை களஞ்சியப் படுத்துவதற்கு ஆலயவீதியில் தென்மேற்கு மூலையில் மின் பிறப்பாக்கி காப்பகத்துக்கு அருகே விறகு கொட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. இடவசதி தேவை என்பதற்காக அக் கொட்டில் இப்பொழுது இம்மடத்தின் தென்மேற்கு வேலி ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி இழைப்பாறு மண்டபம் :-

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் நான்கு தீர்த்தங்களில் மூன்று தீர்த்தங்கள் ஆலயத்தின் முன்னால் உள்ள தீர்த்தக் கேணியில் நடைபெறுகின்றன. ஒரு தீர்த்தம் மட்டும் சமுத்திர தீர்த்தமாகும். வருடாந்த ஆனி உத்தர தீர்த்தம் விநாயக சஷ்டி காப்பறுப்பு தீர்த்தம் என்னும் இரண்டுக்கும் ஆலயத்தில் உள்ள உற்சவ மூர்த்திகள் அனைவரும் தீர்த்தக் குளத்திற்கு எழுந்தளுவது வழக்கம் சிவராத்திரி தீர்த்தத்திற்கு முத்துக்குடை நிழலில் தீர்த்தக்குள வெளி வீதியில் கொலு வீற்றிருக்கச் செய்து கிரியைகளை நடாத்தி தீர்த்தம் ஆடினர். அலங்காரமான ஓர் இழைப்பாறு மண்டபத்தில் எழுந்தருளிகளை கொலு வீற்றிருக்கச் செய்ய வேண்டும். என்ற எண்ணம் 2002ம் ஆண்டு ஆனி உத்தர தீர்த்தத்தின் போது திருவருள்துணையால் நிறைவேறிற்று பள்ளமாக இருந்த பன்குளத்தின் ஒரு பகுதியை நிரப்பி பல லட்சம். ரூபா செலவில் இவ் மண்டபம் கட்டப்பட்டுளளது. இம் மண்டபம் ஆலயத்திற்கு வடகிழக்கே தீர்த்தக்கேணிக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் கூரை கொங்கிறிற்றினால் ஆனது.

குடும்பக் கிணறுகள் :-

இந்த கோவில் நிருவாகத்தில் ஆறு குடும்பங்களைச் சோர்ந்த மக்கள் பங்காளிகளாகவும் உரித்தாளிகளாவும் உள்ளனர். இக் குடும்பத்தவர்கள் தத்தமது குடும்பத்தின் சார்பில் தனித் தனியாக ஒவ்வொரு கிணறு கட்டியுள்ளனர். தென்மேற்கு மூலையை அண்மியதாக தென்திசையில் மூலஸ்தானத்திற்கு வலப்புறமாக பெத்தாக் கிழவி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது. வடமேற்கு மூலையை அண்மியதாக வடக்கு திசையில் மாமியார் மூலையில் மூலஸ்தானத்திற்கு இடது புறமாக தீர்த்த கிணத்திற்கு வடக்கே பேனாய்ச்சி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே தென்புறமாக மணித்தூணுக்கு கிழக்கே வெளி மண்டபத்திற்கு தெற்கே தென்திசையில் சுரக்காய் மூர்த்தி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது. தென்கிழக்கு மூலையில் சுரக்காய் மூர்த்தி குடும்பத்தினரில் கிணற்றுக்கு சற்று தெற்கே போற்றினாச்சி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது. ஆலயத்தின் தென்திசையிலே மடத்திற்கு அண்மையில் வயலுக்கு சமீபமாக தென்புற வயற்கட்டின் அருகே சட்டி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் ஏற்படும் வசதியீனங்களை கருத்தில் கொண்டு அதனை இப்பொழுது பொருத்தமான இடத்தில் கட்டுவதற்காக இதனை மூடி உள்ளனர். வடகிழக்கு மூலையை அண்மியதாக வைரவர் கோவிலின் பின்புறமாக வெளி மண்டபத்திற்கு வடக்கே வள்ளி நாயகி குடும்பத்தினரின் கிணறு அமைந்துள்ளது.

 

தீர்த்தக்குளம் :-

ஆலயத்திற்கு முன்னால் பன்குளம் என்ற கிராமியக்குளம் அமைந்துள்ளது. விநாயகர் சஷ்டி காப்பறுப்பு தீர்த்தம் கார்த்திகை மார்கழி மாதத்தில் நடைபெறும். போது இக் குளம் மழை நீரால் நிரம்பி இருக்கும். ஆரம்ப காலத்தில் இவ் விரதத்திற்கு வைக்கப்பட்ட கும்பத்தினை சொரிந்து தீர்த்தம் ஆடினர் ஆலயத்தில் இருந்த சகடை என்ற சிறியதேரின் கும்பத்தையும் அறுக்கப்பட்ட காப்புகளையும் எடுத்து வந்து தீர்த்தம் ஆடுவது வழக்கம் அப்பொழுது சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள இப் பன்குளம் முழுவதும் தீர்த்தக்குளம் என்று கருதப்பட்டது. பின்னர் சிறியதோர் தீர்த்தக் கேணி அமைக்கும் முயற்சியில் ஆலய நிருவாகம் ஈடுபட்டது. அரை குறையாக அது தடைப்பட்டு நின்றது. பின்னர் விசாலமான தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டது. 300' ஓ 200' ஸ்ரீ 6000 சதுர அடி பரப்பளவுடையது. இதனை ஆழமாக்கும் முயற்சியின் போது தோண்டி எடுக்கப்பட்ட மண் சனசமூக நிலைய கட்டிடம் அமைப்பதற்கான பூமியை நிரப்புவதற்கும் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்லும் பாதை அருகில் உள்ள மருத மரங்களுக்கு நிலம் தயாரிப்பதற்கும் உதவியது. ஆனி உத்தர தீர்த்தத்தின் போது வரட்சி காரணமாக தீர்த்தக்கேணியில் நீர் மட்டம் குறைந்தால் ஏற்று நீர்ப்பசன நீர்பம்பிகள் மூலம் மட்டக்களப்பு வாவி நீர் இறைக்கப்படுவதும் உண்டு.

கல்லடிப் பிள்ளையார் ஆலயம்

சுயம்பு லிங்கப் பிள்ளையாரின் ஆலயத்திற்கு கிழக்கே பிரதான பாதையின் மேற்கே மிகப் பழைமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று நின்றது. வயது முதிர்ந்த இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியில் ஒரு பொந்து காணப்பட்டது. நிலமட்டத்தோடு ஆரம்பித்த இந்த பொந்தினுள் இரண்டு மூன்று பேர் புகுந்து மறைந்திருக்கக் கூடியதாக அது விசாலமாக இருந்தது. அடிப் பகுதி சேதமுற்றிருந்தாலும் மேல் இருந்த கிளைகள் செழித்து குளிர்ந்த நிழலை வழங்கின. கால் நடையாக பிரயாணம் செய்வோர் இவ்விடத்தில் சற்று இளைப்பாறி செல்லது வழக்கம் அப்போது இவ்விடத்தில் நின்றபடியே சுயம்பு லிங்கப் பிள்ளையாரையும் மனதில் நினைத்து வணங்கலாயினர். வேப்பமரத்தடியில் ஒரு கல்லை வைத்து அதை பிள்ளையாராக நினைத்து கற்பூரம் கொழுத்தி வழிபடலாயினர். வேப்பமரத்தை சுற்றி வந்து கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து வேப்பமரத்து பொந்தினுள் காணிக்கையும் போடலாயினர். தமது பிரயாணமும் தாம் நினைத்துச் செல்லும் காரியங்களும் தடையின்றி நிறைவேற பிள்ளையாரைக் கும்பிடும் அடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வாகன சாரதிகளும் இவ்விடத்தில் நின்று பிள்ளையாரை வணங்கினர். இதனை அவதானித்த அடியார் ஒருவர் களி மண்ணினாலே பிள்ளையார் உருவம் ஒன்றை இவ்விடத்தில் வைத்தார் தகரப் பேணி ஒன்றை உண்டியலாக்கினார் திருநீற்றுக் குடவை ஒன்றினுள் திருநீறும் போட்டு வைத்தார். படிப்படியாக இவ்விடத்தில் ஆலயம் ஒன்று ஆரம்பமாயிற்று ஓலைக் கொட்டில் தகரக் கொட்டில் என்று மாறி இப்பொழுது கொங்கிறிற் தளத்தால் ஆன கூரையுடன் அழகிய சிறியதோர் ஆலயமாக காட்சி தருகின்றது. பழைய வேப்பமரம் சூறாவளியினாலும் மின் இணைப்புக் காரணமாகவும் அகற்றப்பட்டுவிட்டது. வேப்பமரத்தடியில் ஆரம்பிக்கப்பட்டதால் வேப்பயடிப் பிள்ளையார் என்றும் கல்லொன்றை வைத்து ஆரம்பித்தமையாலும் நாள்தோறும் பல நூற்றுக் கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்ட கல் அமைந்திருந்தமையாலும் கல்லடிப் பிள்ளையார் என்றும் பெயரிட்டனர். உண்டியல் காணிக்கை வருமானம் அதிகரிப்பதைக் கண்ட பிள்ளையார் ஆலய நிருவாகம் இவ்வாலயத்தையும் தன் வசம் எடுத்துக் கொண்டது. பிள்ளையார் கோவிலுக்குரிய உண்டியல் ஒன்று அவ்விடத்தில் வைக்கப்பட்டது. அதனை பாதுகாப்பதற்கும் ஒருவர் நியமிக்கப்பட்டார். உண்டியலை மாலை நேரத்தில் தூக்கி வந்து வீட்டில் வைத்திருந்து அதிகாலையில் மீண்டும் கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் வைப்பதுண்டு ஆரம்ப காலத்தில் சல்லி என்னும் அழைக்கப்படும் அரைச்சதம் ஒருசதம் இரண்டுசதம் ஐந்துசதம் பத்துச்சதம் என்பனவையே பெரும் அளவில் காணிக்கையாக போடப்படும் இருபத்தைந்து சதம் ஐம்பது சதம் ஒரு ரூபா என்பவை மிகக் குறைவு வெள்ளி தங்க நாணயங்களும் போடப்படுவதுண்டு. உண்டியலை பாதுகாப்பவருக்கு காணிக்கையாக கிடைத்த அரைச்சதம் ஒருசதம் என்பவற்றையே கூலியாக கொடுத்தனர். ஆலயம் புனரமைக்கப்பட்டபோது பங்குனிமாத உத்தர நட்சத்திரத்தில் விசேட அபிசேகம் வருடந்தோறும் நடை பெறுகின்றது.

ஆலய வளர்ச்சி :-

வேடர்களின் வெற்றிலைச் சடங்கு எனப்படும் வெற்றிலைச் சடங்கு எப்போது தொடங்கி எத்தனை வருடங்கள் தொடர்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. கதிர்காம யாத்திரியர்கள் சிவலிங்கத்தை கண்டு வணங்கிய ஆண்டும் குறிப்பிடப்படவில்லை. கொத்துப் பந்தலாகவும் ஓலைக் குடிசையாகவும் களிமண் கோவிலாகவும் எத்தனை வருடங்கள் வழிபாடு நடைபெற்றதோ தெரியாது. ஆனால் கலியுகம் பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடபமாத மதில் இரண்டாம் திகதி தனி முகூர்த்தம் இட்டு ஆலயமாய் வணங்கலாயினார். இதன்படி

 

ஸ்ரீ 285

 

2 10 8 10 5 ஸ்ரீ 15
2 ஓ 8 10 5 ஸ்ரீ 21
2 10 8 ஓ 5 ஸ்ரீ 50
2 ஓ 8 10 5 ஸ்ரீ 80

இதன்படி கலியுகம் பிறந்து 15 - 285 வரையிலான ஆண்டினுள் இது முகூத்தம் இட்டு ஆலயமாக வணங்கப் பட்டதாக கல் வெட்டு கூறுகின்றது.பஞ்சாங்கத்தின் படி கி.பி 2002 ம் ஆண்டு. கலியுகம் 5104 வருடம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. கலி பிறந்தது 285 ஆண்டுகளின் பின் ஆலயம் அமைக்கப்பட்டிருப்பின் இற்றைக்கு 4819 வருடத்திற்கு முன்னர் இவ்வாலயம் முகூர்த்தம் இடப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதானால் இதன் ஆரம்ப கால வளர்ச்சிப் படிகளை உறுதியாக கூறமுடியாது உள்ளது. சிவலிங்கத்திற்கு மட்டும் பூசை நடத்தி பக்கத்தில் உள்ள நாகதம்பிரான் புற்றுக்கு பால் பழம் கரைத்துவைத்துள்ளனர். நில மட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை அரிக்கஞ்சட்டி ஒன்றினால் மூடி பாதுகாத்த வழக்கம் மிக அண்மைக் காலம் வரை தொடர்ந்தது. மூலஸ்த்தானம் மட்டுமே ஆலயமாக இருந்து படிப் படியாக வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் ஆலயத்தின் கதவு நிலை கோப்பிச வேலைகளுக்கு காட்டு மரங்களை பெற்றுக் கொள்வதில் ஆலய நிருவாகிகள் ஆன வண்ணக்குமாரும் ஊரவர்களும் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். அக்காலத்தில் ஆலய வருமானம் மிகக்குறைவு மரங்களை விலை கொடுத்து பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார திண்டாடியுள்ளனர். படவான்கரைப் பகுதியில் இருந்து களவாக வெட்டி வருவோரிடம் விலை குறைவாக மரங்களைப் பெறமுடியும் றேஞ்சர் எனப்படும். வனபரிபாலன அதிகாரிகளும் விதானை உடையார். வன்னியனார் ஆகியோரின் கெடு பிடிகளும் மிக அதிகமாக இருந்தமையால் கோவிலுக்குரிய மரங்களை பெறுவதில் அவற்றை தேவைக் கேற்ப அறுத்து உருப்படிகளாக்குவதிலும் பல துன்பங்களை சந்திக்க வேண்டி இருந்தது என்னும் பிள்ளையாரின் அருள் அவற்றையெல்லாம் வென்றுநின்றது. ஆலயத்தில் உள்ள சந்தன மண்டபம் கட்டப்பட்டபோது கோப்பிச வேலைகளுக்கு உரிய மரங்களைப் பெறுவது பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டது. 21 அடி நீளம் பெரிய உலாத்தல்களுக்கு மரம் தேவைப்பட்டபோது களவாக காட்டில் மரம் வெட்டுவோரிடம் சொல்லி இரவிலே மரங்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனபரிபாலான திணைக்கள உத்தியோகத்தர்கள் மரத்தை பிடித்துவிட்டனர் மரம் கொண்டு வந்த வண்டில் காரர்களும் கோவில் வண்ணக்குமாரும் உண்மையை சொல்லி கெஞ்சி மன்றாடி பார்த்தனர் ஆனால் அதிகாரிகள் இணங்கவில்லை பழுகாமம் உடையாரிடம் வண்டில் மாடுகளோடு மரங்களையும் கொண்டு சென்றனர்.

விசாரணையின் போது உண்மையை உணர்ந்த உடையாரும் பிள்ளையாருக்குத் தேவையான மரங்களை கொண்டு செல்ல அனுமதிப்போம். என்று கூறியும் அதிகாரிகள் சட்டத்தை கெட்டியாக நிலைநாட்டினர். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உடையாரின வீட்டு அருகில் இருந்த பாழ் வளவினுள் மரங்களை பறிமுதல் செய்து போட்டனர் வண்டில்காரர்களும் வண்ணக்குமாரும் ஏமாற்றத்தோடும் கவலையோடும் வெறும் கையோடும் வீடு திரும்பினர். மண்டபத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற கவலையோடு இருந்தவர்களுக்கு கனவிலே பிள்ளையார் தோன்றினார். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் எனக்கு தேவையில்லை என்னுடைய வேலைக்குரிய மரங்கள் விரைவில் கடலில் வந்தடையும் என்று கூறினார். வங்காள விரிகுடா கடலிலே பெருமரம் ஒன்று கரை ஒதுங்கியது. அதன் அளவு மண்டபத்திற்கு தேவையான உலோத்தல் வளைகள் கைமரங்கள் யாவும் இதில் இருந்தே பெறப்பட்டன. மீதியாகவும் மரங்கள் கிடந்தன ஆலயத்தின் சுற்றுப் பிரகார கோப்பிச வேலைகளுக்கு தேவையான மரங்களும் உரிய காலத்தில் கடலில் கரை ஒதுங்கியவையே ஆகும். இப்பெருமரங்கள் எங்கிருந்து எப்படி வந்து சேர்ந்தன. என்பது பிள்ளையாருக்குத்தான் தெரியும் பிள்ளையாரின் மரங்களை பறிமுதல் செய்து தடைப்படுத்திய வன பரிபாலன அதிகாரிகள் பல வித துன்பங்களை அனுபவித்து பிள்ளையாரிடம் வந்து நேர்கடன் வைத்து மன்னிப்பு பெற்றதாக கூறுவர். நாகதம்பிரான் ஆலயமும் பிற்காலத்திலேயே ஆலயமாக கட்டப்பட்டிருக்க வேண்டும். சூலத்துடன் காணப்பட்ட வைரவர் பந்தல் பிற்காலத்தில் கற்கோயிலாக மாறியது. நவக்கிரக கோவிலும் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டதேயாகும். 1956ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தினால் கதிர்காமம் செல்வோர். அங்கு போகமுடியாத நிலையில் இங்கு தீர்த்தம் ஆட வேண்டிய தேவை ஒன்று ஏற்படலாயிற்று அதனை தொடர்ந்தே உற்சவ மூர்த்திகள் வசந்த மண்டபம் என்பவையெல்லாம் அவசியமாயின சுற்று மதிலின் உள்ளேயிருந்த உள் வீதியில் செவ்வரத்தை, மல்லிகை திருவாத்தி முதலிய பூ மரங்களும் மாதுளை தோடை முதலிய பழமரங்களும் தெமிலி தென்னை மரங்களும் தற்பைப் புல்லும் பேணிப் பாதுகாக்கப்பட்டன. ஆரம்ப

காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் நடைபெறும் பூசை 1948ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பின்னர் நாள் தோறும் நடைபெறும் பூசையாக மாற்றப்பட்டது. பின்னர் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் பூசை நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்ட இனக்கவரம், வன்செயல்கள் இடம் பெயர்வு என்பவை காரணமாக மீண்டும் ஒரு வேளை பூசையாக மாறிற்று பாரம்பரியமாக ஆலய சொத்துகளையும் வருமானங்களையும் வண்ணக்குமாரே நிருவகித்து வந்துள்ளனர். சில காலப்பகுதிகளில் நிருவாக ஒழுங்கீனங்கள் காரணமாக தகராறுகள் ஏற்பட்டும் உள்ளன. இருப்பினும் வரன் முறையான சீரான நிருவாகம் ஒன்று சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலே கி.பி. 880 - 12ம் நூற்றாண்டு வரை சோழர் ஆட்சிக் காலம் பேசப்படுகிறது. அக்காலத்தில் சோழ அரசர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் எச்ச சொச்சங்கள் இவ்வாலயத்திலும் கிராமத்திலும் இன்றும் நடைமுறையில் உள்ளதை அவதானிக்கலாம். கோவில் பல தடவைகள் புனர்நிருமாணம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊர் மக்களின் நிதி உதவியே முதன்மை பெற்றுள்ளது. ஏனைய அடியவர்களின் உதவியும் மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 1948ம் ஆண்டு காலப் பகுதியில் தரும வேலை என்ற பெயரில் பெருமளவிலான சிரமதான வேலை ஒன்று ஆலய சூழலில் நடை பெற்றுள்ளது. ஆலயத்தின் வீதி விஸ்தரிக்கப்பட்டதோடு தென்னை மரங்களும் நடப்பட்டு இருக்கின்றன.

அற்புதச் சம்பவங்கள்

களுதாவளை சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலயத்தின் தோற்றம் பற்றுp கூறுகின்ற களுகேவாலய கல்வெட்டினை ஆழமாக பார்க்கும் போது சில விடயங்கள் தெளிவாகின்றன. வேடர்களின் தலைவனான களுவன் வெள்ளிலைச் சடஙங்கு செய்வதற்கு இந்த இடத்தினைச் தெரிவு செய்தமையும் ஒரு அற்புதச் செயலே ஆகும். கதிகாம யாத்திரிகர்கள்; இவ்விடத்தில் தங்கியதும் பூசையின் போது சிவலீங்கத்தை கண்டது பின்னர் நில மட்டத்திற்கு மேல் அதனை உயர்த்தி வைக்க முற்பட்டபோது அச் சிவலீங்கம் மூலம் பொறுக்க நீண்டு சென்றதும் அற்புதங்களேயாகும். சிவலீங்கத்தை பிள்ளையாராக வழிபடுங்கள் என்று மணியான் பூபால வன்னிமை கூறியதற்கு அமைய பின்ளையாராக வழிபடுவதும் அற்புதமே. பலீபீட நந்தியை மாற்றி மூசிகம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரும் பலீபீட நந்தி பலீபீட அறையினுள் பாதுகாப்பாக இருப்பதும் அற்புதமே. கருவறையை அடுத்து பலீபீட மண்டம் அமைக்கப்பட்டு இருப்பதும் அற்புதமேயாகும். களுவை நகர் களுதேவாலய கல்வெட்டில் குறிப்பிடப் பட்டது போன்று தென்மேற்கு மூலையில் நாகம்மையின் இருப்பிடமான கோவில் அமைந்துள்ளது. அன்று தொடக்கம் இன்று வரை நாகங்கங்கள் கோவிலின் உள்ளேயும் புறத்தேயும் வசித்து வருகின்றன. இவை கோவிலின் காவலாளிகள் போல் செயற்படுவதும் அதிசயமேயாகும்.

இவ்வாறு அதிசயங்கள் எண்ணிலடங்காதவை........

ஆலய அமைப்பு பற்றி அறிவதற்கு

 

புதியவை இங்கே...

விளக்கமாக விரைவில்

image 

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்;

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்;

Read more...

விளக்கமாக விரைவில்;

image

விளக்கமாக விரைவில்;

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்;

image

விளக்கமாக விரைவில்

Read more...

tpsf;fkhf tpiutpy;

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்;

image

விளக்கமாக விரைவில்

Read more...

 

 
 
  Domain Name + 1GB Linux India Web Hosting in Rs.349